Advertisement

மாநகராட்சி வழங்கியதுபோல் 5 ஆயிரம் போலி கட்டிட அனுமதி? - கடலூர் தம்பதி, புதுச்சேரி பெண் மீது போலீஸில் புகார்

கடலூர்: கடலூர் மாநகராட்சியில் வழங்குவதுபோல போலி கட்டிட அனுமதி வழங்கி பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக ஒரு தம்பதி மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு பெண் மீது மாநகராட்சி சார்பில் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி அனுமதிகள் வழங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடலூர் மாநகராட்சி ஆணையரின் கையெழுத்தை போலியாக போட்டும், அரசு முத்திரைகளை பயன்படுத்தியும் மனைப் பிரிவுகள் மற்றும் வீடு கட்ட அங்கீகாரம், வீடுகள் கட்டுவதற்காக வாங்கும் கடன் என பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதில், ஒரு தம்பதி உட்பட 3 பேர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments