Advertisement

பல்லடம் கொலை சம்பவம் | குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ் - 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

திருப்பூர்: பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றார். இதனால் போலீஸார், அவரை காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மோகன்ராஜ்(49), அவரது சகோதர் செந்தில்குமார்(46), தாய் புஷ்பவதி(68), சித்தி ரத்தினாம்பாள்(59) ஆகிய நால்வரை கடந்த 3-ம் தேதி மாலை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments