Advertisement

திருப்பூர் - பல்லடம் பகுதியில் 7 நாய்களை விஷம் வைத்துக் கொன்ற சம்பவத்தால் அதிர்ச்சி!

திருப்பூர்: பல்லடம் நகரில் 7 நாய்களுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர் 18 வார்டுகளை கொண்டது. இதில் ஐந்தாவது வார்டு பகுதியில் மர்மமான முறையில் நாய்கள் உயிரிழந்திருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள், நகராட்சி சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் பல்லடம் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் நாய்கள் இறப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments