
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கட்டிடத் தொழிலாளி ஒருவர், உடலில் கத்திக் குத்துக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கணபதி. இவருக்கு சரவணக்குமார் (24), ராஜா (21), சசிக்குமார் (18) என 3 மகன்கள் உண்டு. இதில் முதல் மகன் சரவணக்குமார் திருமணம் முடிந்து தந்தை கணபதி வீட்டின் அருகே குடியிருந்து வருகிறார். கணபதியின் 3-வது மகன் சசிக்குமார் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments