Advertisement

திருப்பூரில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.16 லட்சம் கொள்ளை: கோவையை சேர்ந்த காவலரின் கணவர் உட்பட 2 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக் கடையின் உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி, ரூ.16 லட்சத்தை பறித்துச் சென்ற கோவையைச் சேர்ந்த காவலரின் கணவர் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள காமாட்சி அம்மன் கோயில் வீதியில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹஜ்மத் சிங் (40) என்பவர் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு இவரது கடைக்கு பொருட்கள் வாங்குவதைப் போல வந்த 6 பேர் கும்பல், திடீரென அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி ஹஜ்மத் சிங்கை மிரட்டி ரூ.16 லட்சம் ரொக்கம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு காரில் தப்பினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments