
புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா, உகாண்டா ஆகிய நாடுகளில் கால் செண்டர் அமைத்து, அதன் மூலம் அமெரிக்க குடிமக்களை சிலர் ஏமாற்றி வந்துள்ளனர். அந்த மோசடி நபர்கள் தங்களை அமெரிக்க வருவாய் துறை, போதைப் பொருள் தடுப்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் எனக் கூறி, அமெரிக்க குடிமக்களிடம் இணையம் வழியாக பணம் பறித்து வந்துள்ளர்.
இந்த மோசடி நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இதில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐயுடன் இணைந்து விசாரனை நடத்தி வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments