
சென்னை: சென்னை குறளகம் வளாகத்தில் உள்ள பத்திரப் பதிவுத்துறை ஐஜி கட்டுப்பாட்டில் மாற்றுப்பணி, பத்திரப்பதிவு உதவி செயல் பொறியாளர் அலுவலகம் உள்ளது. சார்-பதிவாளர் அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் விற்பனை பத்திரங்கள் இங்கு ஆய்வுசெய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும்.
இந்நிலையில், இந்த அலுவலகத்தில் உதவி செயல் பொறியாளராகப் பணிபுரிந்து வந்த ரமேஷ் மற்றும் இளநிலை உதவியாளர் விஜயகுமார் ஆகியோர், கூடுவாஞ்சேரி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட, வழக்கறிஞர் ஒருவரது வாடிக்கையாளரின் ஆவணத்தை ஆய்வு செய்து அனுமதி வழங்க, ஓர் ஆவணத்துக்கு ரூ.2 ஆயிரத்து 500 வீதம் 10 ஆவணத்துக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments