Advertisement

காவல் நிலைய செலவு என்ற பெயரில் ரூ.3,000 லஞ்சம் வாங்கியதாக பெண் எஸ்.ஐ. கைது

திருவண்ணாமலை: காவல் நிலைய செலவு என்ற பெயரில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பரமேஸ்வரி நேற்று கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை அடுத்த கீழ்பாலானந்தல் கிராமத்தில் வசிப்பவர் வெற்றிவேல். இவரது மனைவி பரிமளா. இத் தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், பூந்தமல்லியில் உள்ள சகோதரர் வீட்டுக்கு பரிமளா சென்றுள்ளார். மேலும் அவர், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments