Advertisement

மத்திய பிரதேசத்தில் நிலத் தகராறில் துப்பாக்கியால் சுட்டதில் ஒரே குடும்பத்தில் 3 பெண் உட்பட 6 பேர் உயிரிழப்பு

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் நிலத் தகராறு காரணமாக இரு குடும்பத்தினரிடையே நேற்று ஏற்பட்ட மோதல் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

மத்திய பிரதேசம் மொரேனா மாவட்டத்தில் உள்ள லெபா கிராமத்தில் ரஞ்சித் தோமர், ராதே தோமர் ஆகியோர் நீண்ட காலமாக வசித்து வந்தனர். இவர்களுக்கு இடையே பல ஆண்டுகளுக்கு முன்பே நிலத் தகராறு ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments