
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்தவிருந்த 5.250 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீசார், பெண் விற்பனையாளர் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து, கர்நாடகாவிற்கு லாரி மூலம் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அருண், எஸ்பி பாலாஜி, டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, எஸ்ஐக்கள் மூர்த்தி, நேரு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொண்டு குழுவினர் சனிக்கிழமை காலை ஓசூர் எஸ்எல்வி நகரில் உள்ள சர்தார்(32) என்பவரது வீட்டை சோதனை செய்தனர். அங்கு நின்றிருந்த லாரியில் 50 கிலோ எடை கொண்ட 105 சாக்கு பைகளில் 5.250 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments