
மதுரை: ஈமு கோழி வளர்ப்பு நிறுவன மோசடி வழக்கில் நிறுவன மேலாண் இயக்குநர் உட்பட 2 பேருக்கு சிறைத் தண்டனையும், ரூ.2.83 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்ட ஈமு கோழிப் பண்ணை தனியார் நிறுவனம், நெல்லை மாவட்டத்திலும் செயல்பட்டது. தங்களது பண்ணையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி பலரிடம் 2012-ல் பணம் வசூலித்தனர். சில மாதங்கள் லாபத்தில் பங்கு கொடுத்தனர். இதையடுத்து மேலும் பலர் முதலீடு செய்தனர். அதிக முதலீடுகளை வசூலித்த நிலையில் திடீரென நிறுவனம் மூடப்பட்டது. அதை நடத்தியவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments