Advertisement

மறுவாழ்வு மையத்தில் சிறுவன் கொலை: உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேமெதிபாளையம், முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் மகன் மனோஜ்குமார்(13). தந்தை உயிரிழந்ததால், தாய் அகிலா பராமரிப்பில் இருந்து வந்த மனோஜ்குமார், கடந்த மாதம் 21-ம் தேதி சோழவரம் அருகே ஜனப்பன்சத்திரம் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், மனோஜ்குமார் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி இரவு மயங்கி கீழே விழுந்ததால், சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக மறுவாழ்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments