Advertisement

சென்னை | ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக தனியார் வங்கியின் முன்னாள் மேலாளர் கைது

சென்னை: தி.நகரில் உள்ள தனியார் வங்கியில் ரூ.36.29 லட்சம் மோசடி செய்ததாக அந்த வங்கியின் முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை, தி.நகர், ஜி.என் செட்டி சாலையில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக சுகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், ``தங்களது வங்கியில் 2019-ம் ஆண்டு தணிக்கை செய்தபோது, வங்கியில் மனிதவள நிர்வாக மேலாளராக பணியாற்றிய ஆனந்தராஜ் மற்றும் சிலர், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உதவியுடன் வங்கி பணியாளர்களை தேர்வு செய்ததில் ரூ.36 லட்சத்து 29,246 செலவானதாக போலியான ரசீதுகளை தயாரித்து வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்'' என புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments