
சென்னை: வேளச்சேரியில் மாயமான 16 வயது சிறுவனை 36 மணி நேரத்தில் சென்னை போலீஸார் டெல்லி சென்று மீட்டுள்ளனர்.
சென்னை, வேளச்சேரியில் உள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவன் ஒருவர் கடந்த 2-ம் தேதி பள்ளிக்குச் சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த மாணவனின் தந்தை வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரடி மேற்பார்வையில், வேளச்சேரி ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments