
12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு நாளைமுதல் 27ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்திருக்கிறது.
12ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள் மீண்டும் தனித்தேர்வு எழுதும் வாய்ப்பு அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி நாளைமுதல் 27ஆம் தேதிவரை மாவட்டவாரியாக அரசு தேர்வுத்துறை சேவைமையம் மூலமாக மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்திருக்கிறது. மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்து பாடத் தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தற்போது எழுதவுள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது என்றும் அரசுத் தேர்வு இயக்ககம் தெரிவித்திருக்கிறது.
விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 6ஆம் தேதிமுதல் 19ஆம் தேதிவரை நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறது. +2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் துணைத்தேர்வை எழுத விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments