
பொன்னேரி: சென்னை, திருவொற்றியூர் அருகே விம்கோ நகரில் அண்ணனை கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து, பொன்னேரி- கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை, திருவொற்றியூர் அருகே உள்ள விம்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (35).
இவரது தம்பி ராஜேஷ் (33). இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி தகராறு ஏற்பட்டது. அப்போது, சகோதரர்கள் இருவரும் மதுபோதையில் இருந்த நிலையில், ராஜேஷ், அண்ணன் சுரேஷ் தலையில் அம்மி கல்லை போட்டு அவரை கொலை செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments