
புவனேஸ்வர்: ஒடிசாவின் கலஹண்டி மாவட்டம் நர்லா பகுதியை சேர்ந்த பிரபல ஒப்பந்ததாரர் தினேஷ் அகர்வால்.
இவரது காரில் கடந்த 6-ம் தேதி ஒரு கடிதம் கிடந்தது. இதில் தன்னை நக்சலைட் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் ரூ.35 லட்சம் தராவிட்டால் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்று விடுவதாக மிரட்டியிருந்தார். இதுபோன்ற மிரட்டல் கடிதம் தினேஷ் அகர்வாலின் தொழில் கூட்டாளிக்கும் வந்தது. இதையடுத்து நர்லா காவல் நிலையத்தில் தினேஷ் அகர்வால் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments