
புதுவண்ணாரப்பேட்டையில் யார் பெரிய ஆள் என்ற மோதலில், ரவுடி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை புதுவண்ணராப்பேட்டை, வெங்கடேசன் தெருவைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் என்ற மயாண்டு (20). இவர் மீது புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்பட பல வழக்குகள் உள்ளது. போலீஸாரின் ‘சி’ பிரிவு ரவுடி பட்டியலில் இருந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் சிலருக்கும் அவர்கள் ஏரியாவில் யார் பெரிய ஆள் என்பதில் மோதல் இருந்து வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments