Advertisement

சென்னை | ஆர்.ஏ.புரத்​தில் வீட்​டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, பணத்தை திருடிய நபர் சிறையிலடைப்பு

சென்னை: அபி​ராமபுரத்​தில் வீட்​டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை, பணத்தை திருடிய நபரை போலீ​ஸார் சிறையில் அடைத்தனர். சென்னை ஆர்​.ஏ.புரம் வல்​லீஸ்​வரன் தோட்​டம் பகு​தி​யில் வசித்து வருபவர் ராஜா(40). பழைய பொருட்​கள் வாங்கிவிற்கும் தொழில் செய்து வரு​கிறார். கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி காலை வீட்டை பூட்​டி​விட்டு குடும்​பத்​துடன் ராஜா வெளியே சென்​று​விட்​டார்.

பின்​னர், மாலை​யில் திரும்பி வந்​த​போது, வீட்​டின் பூட்டு உடைக்​கப்​பட்​டிருந்​ததை கண்டு அதிர்ச்சி அடைந்​தார். உள்ளே சென்று பார்த்​த​போது, பீரோ​வில் இருந்த 20 பவுன் நகை, ரூ.1 லட்​சம் பணம் திருடு போயிருந்​தது தெரிய​வந்​தது. இதுகுறித்த புகாரின்​பேரில் அபி​ராமபுரம் போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வந்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments