
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன், கல்லீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அண்மையில் உயிரிழந்தார். இதே வழக்கில் கைதாகி சிறையில் இருந்த நாகேந்திரனின் மகன்களான அஸ்வத்தாமன், அஜித்ராஜ் ஆகியோருக்கு தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மூன்று நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நாகேந்திரனின் 16-ம் நாள் காரியம் வரும் அக்.26- தேதி நடைபெறவுள்ளதால் சிறையில் உள்ள அவருடைய இளைய மகன் அஜித்ராஜூக்கு 2 நாட்கள் பரோல் வழங்கும்படி நாகேந்திரனின் மனைவி விசாலாட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments