
போரூர் பகுதியில் டிப்பர் லாரி மோதி 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குன்றத்தூர் பகுதியை சேர்ந்த சாரதா என்பவர் தனது சகோதரியின் மகள் யோக ஸ்ரீயை அய்யப்பந்தாங்கலில் உள்ள பயிற்சி மையத்துக்கு நேற்று காலை 6.30 மணியளவில் கால்பந்தாட்ட பயிற்சிக்காக 2 சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். குன்றத்தூர்- போருர் பிரதான சாலையில் எம்.எஸ்.நகர் என்ற பகுதி அருகே சென்றபோது வேகமாக வந்த டிப்பர் லாரி அவர்கள் மீது மோதி யது. இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டி சென்ற சாரதாவும். யோகஸ்ரீ-யும் கிழே விழுந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments