Advertisement

அமைச்சர் தியாகராஜன் வீடு உட்பட சென்னையில் 5 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை

சென்னை: அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் வீடு உட்பட சென்​னை​யில் 5 இடங்​களுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுவிக்​கப்பட்டது குறித்து போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். நந்​தம்​பாக்​கத்​தில் உள்ள சென்னை வர்த்தக மையத்​தின் மின்னஞ்​சல் முகவரிக்கு விடுதலைச் சிறுத்​தைகள் கட்சி எம்​எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் பெயரில் நேற்று மின்​னஞ்​சல் ஒன்று வந்​தது.

அந்த மின்​னஞ்​சலில், சென்னை வர்த்தக மையத்​தி​லும், தமிழக தகவல் தொழில் ​நுட்​பத்​துறை அமைச்​சர் பழனிவேல் தியாகராஜனின் வீட்​டிலும் வெடிகுண்டு வைக்​கப்​பட்​டிருப்​ப​தாக​வும், அது சிறிது நேரத்​தில் வெடிக்​கும் எனவும் குறிப்​பிடப்பட்டிருந்தது. அத்​துடன், சென்னை கோட்​டை​யில் உள்ள கடற்​படை கேண்​டீன், புரசை​வாக்​கம் பிஎஸ்​என்​எல் அலு​வல​கம், தேனாம்​பேட்டை தலைமை கணக்கு கட்​டுப்​பாட்​டாளர் அலு​வல​கம் ஆகிய இடங்​களுக்​கும் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments