
சென்னை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீடு உட்பட சென்னையில் 5 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் பெயரில் நேற்று மின்னஞ்சல் ஒன்று வந்தது.
அந்த மின்னஞ்சலில், சென்னை வர்த்தக மையத்திலும், தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், சென்னை கோட்டையில் உள்ள கடற்படை கேண்டீன், புரசைவாக்கம் பிஎஸ்என்எல் அலுவலகம், தேனாம்பேட்டை தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments