
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் குதித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்றனர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் குப்பம் புதுப்பேட்டை ஏ.பி. சாலை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமண மூர்த்தி (50). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜோதி (40), மகள் கிருத்திகா (20). இவர்களுடன் ஜோதியின் தாய் சாரதாம்மாளும் (75) வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று 4 பேரும் கிருஷ்ணகிரி அணைக்கு வந்தனர். அங்கு சிறிய மதகின் முன்பகுதியில் ஒவ்வொருவராக நீரில் குதித்தனர். அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் அவர்களைக் காப்பாற்ற முயன்றனர். இதில், கிருத்திகா, ஜோதி ஆகியோர் மீட்கப்பட்டனர். லட்சுமண மூர்த்தி, சாரதாம்மாள் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments