Advertisement

ரயிலில் ரூ.4.5 லட்சம் மதிப்பிலான கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தல்: ஆர்.பி.எஃப் போலீஸார் விசாரணை

சென்னை: ஒடி​சா மாநிலம் புவனேஸ்​வரிலிருந்து சென்னை எழும்​பூருக்கு வந்த வாராந்​திர விரைவு ரயி​லில் கேட்​பாரற்று கிடைந்த இரு பைகளில் ரூ.4 லட்​சம் மதிப்​பிலான கஞ்சா பொட்​டலங்​கள் மற்​றும் ரூ.50 மதிப்​பிலான புகை​யிலைப் பொருட்​கள் கண்​டெடுக்​கப்​பட்​டன. இவற்றை ஆர்​பிஎஃப் போலீ​ஸார் கைப்​பற்றி விசா​ரிக்​கின்​றனர்.

சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் ஆர்​பிஎஃப் ஆய்​வாளர் கே.பி.செ​பாஸ்​டியன் தலை​மை​யில் துணை உதவி ஆய்​வாளர் அன்பு செழியன், தலை​மைக் காவலர் கண்​ணன் உள்​ளிட்ட ஆர்​பிஎஃப் போலீ​ஸார் நேற்று காலை கண்​காணிப்​புப் பணி​யில் ஈடுபட்டிருந்தனர். அப்​போது 7-வது நடைமேடை​யில் ஒடிசா மாநிலம் புவனேஸ்​வரிலிருந்து சென்னை எழும்​பூர் வழி​யாக புதுச்​சேரி செல்​லும் வாராந்​திர விரைவு ரயில் வந்​தது. இந்த ரயி​லில் தடை செய்​யப்​பட்ட பொருட்​கள் கடத்​தப்​படு​கிறதா என்று ஆர்​பிஎஃப் சோதனை செய்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments