
திருவாரூர்: திருவாரூரில் சிறைக் காவலர் உட்பட 3 பேரை தாக்கியதாக திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டு கட்டபொம்மன்தெருவைச் சேர்ந்தவர் கிஷோர்(26). இவரது வீட்டின் முன்பு, அதே பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருப்பணி தொடர்பான பிளக்ஸ் பேனரை 30-வது வார்டு திமுக கவுன்சிலர் புருஷோத்தமன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் வைத்தனர்.
இதுகுறித்து கவுன்சிலர் புருஷோத்தமனிடம் கிஷோர் மற்றும் அவரது நண்பர்களான விக்னேஷ், சிறைக் காவலர் இளங்கோவன் ஆகியோர் கேட்டபோது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பானது. இதில், கிஷோர், விக்னேஷ் காயமடைந்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments