
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கோயில் பூசாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆ.சண்முகபுரத்தை சேர்ந்த மூக்காண்டி மகன் ரவி (38). இவர் தூத்துக்குடி 3-ம் மைல் மடத்தூர் சாலையில் உள்ள பேச்சியம்மன் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்தார்.
ஏரல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ரவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி, ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அப்பெண் தனது கணவர் மற்றும் மகனைப் பிரிந்து, 2 மகள்களுடன் ரவியுடன்வாழ்ந்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments