Advertisement

தூத்துக்குடி | பூசாரி கொலையில் சிறுவன் உட்பட 2 பேர் கைது

தூத்துக்குடி: தூத்​துக்​குடி​யில் கோயில் பூசாரி வெட்​டிக் கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் சிறு​வன் உள்​ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்​டனர். தூத்​துக்​குடி தாள​முத்​துநகர் ஆ.சண்​முகபுரத்தை சேர்ந்த மூக்​காண்டி மகன் ரவி (38). இவர் தூத்​துக்​குடி 3-ம் மைல் மடத்​தூர் சாலை​யில் உள்ள பேச்​சி​யம்​மன் கோயி​லில் பூசா​ரி​யாகப் பணி​யாற்றி வந்​தார்.

ஏரல் பகு​தி​யைச் சேர்ந்த ஒரு பெண்​ணுக்​கும், ரவிக்​கும் பழக்​கம் ஏற்​பட்​டுள்​ளது. அந்த பெண்​ணுக்கு ஏற்​கெனவே திரு​மண​மாகி, ஒரு மகன், 2 மகள்​கள் உள்​ளனர். அப்​பெண் தனது கணவர் மற்​றும் மகனைப் பிரிந்​து, 2 மகள்​களு​டன் ரவி​யுடன்வாழ்ந்து வந்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments