Advertisement

கிருஷ்ணகிரியில் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் 2 பேர் கடத்தல் - கேரளாவில் 5 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ரியல் எஸ்டேட் வியாபாரிகள் 2 பேர் கடத்தப்பட்ட வழக்கில் 5 பேரை கேரள போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி வஹாப் நகரைச் சேர்ந்தவர் முகமது யூசூப் (57). பழையபேட்டை கணபதி தெருவைச் சேர்ந்தவர் ஜபீர் அகமது (67). இவர்கள் 2 பேரும் ரியல் எஸ்டேட் வியாபாரிகள். இவர்களைக் கடந்த 26-ம் தேதி தொடர்பு கொண்ட சிலர் தங்களுக்கு நிலம் வேண்டும் எனக் கூறியுள்ளனர். மேலும், இது தொடர்பாகப் பேசுவதற்காகக் குருபரப்பள்ளி அருகே வருமாறு கூறியுள்ளனர். இதை நம்பி அங்குச் சென்ற முகமது யூசூப், ஜபீர் அகமது ஆகியோரை, அக்கும்பல் காரில் கடத்திச் சென்றனர். மேலும், அவர்களை விடுவிக்க அவர்களது உறவினர்களைச் செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments