Advertisement

தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் பெற்று தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்த கணவன் - மனைவி கைது

சென்னை: தொழில் தொடங்க குறைந்த வட்​டி​யில் கடன் பெற்​றுத் தரு​வ​தாக ரூ.16 லட்​சம் மோசடி செய்​த​தாக கணவன், மனைவி கைது செய்​யப்​பட்​டனர். சென்னை கீழ்ப்​பாக்​கம், பூந்​தமல்லி நெடுஞ்​சாலை​யில் வசித்து வருபவர் அழகு​பாண்​டியன் (29). பல்​வேறு வகை​யான வீட்டு உபயோகப் பொருட்​களை விற்​பனை செய்​யும் பிரபல தனி​யார் நிறு​வனம் ஒன்​றின் கீழ்ப்​பாக்​கம் பகுதி விநி​யோகஸ்​த​ராக உள்​ளார்.

இவருக்கு முகநூல் மூலம் தாம்​பரம் அருகே முடிச்​சூர் வரத​ராஜபுரத்​தைச் சேர்ந்த கீர்த்​தனா (30) மற்​றும் அவரது கணவர் பிரபு இன்​ப​தாஸ் (44) அறி​முக​மாகினர். இவர்​கள் தங்​களுக்கு உயர் அரசு அதி​காரி​கள் மற்​றும் செல்​வாக்கு மிகுந்த நபர்​கள்பலரை தெரி​யும் என்று தெரி​வித்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments