
சென்னை: தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர். சென்னை கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் அழகுபாண்டியன் (29). பல்வேறு வகையான வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் கீழ்ப்பாக்கம் பகுதி விநியோகஸ்தராக உள்ளார்.
இவருக்கு முகநூல் மூலம் தாம்பரம் அருகே முடிச்சூர் வரதராஜபுரத்தைச் சேர்ந்த கீர்த்தனா (30) மற்றும் அவரது கணவர் பிரபு இன்பதாஸ் (44) அறிமுகமாகினர். இவர்கள் தங்களுக்கு உயர் அரசு அதிகாரிகள் மற்றும் செல்வாக்கு மிகுந்த நபர்கள்பலரை தெரியும் என்று தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments