
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி பைனான்சியர் வீட்டில் நேற்று முன்தினம் முகமூடி அணிந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட, மலேசியாவைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் அருகில் வசிப்பவர் கார்த்தி(46).
பைனான்சியர். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் ஓர் அறையில் கார்த்தியும், மற்றொரு அறையில் அவரது மனைவி, 2 மகள்களும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 3 பேர், கார்த்தியின் மனைவி, மகள்களிடம் கத்தியைக் காண்பித்து, நகைகளை கழற்றித் தருமாறு மிரட்டியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments