
பெங்களூரு: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெங்களூரு மண்டல அதிகாரிகள் நேற்று விமான நிலையத்தில் சோதனை நடத்தினர்.
நேற்று அதிகாலையில் தோஹாவில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் 31 வயதான இளைஞரின் உடைமைகளை பரிசோதித்தனர். அவரது பெட்டியில் வழக்கத்துக்கு மாறாக பெரிய அளவில் அதிக கனம் கொண்ட 2 காமிக்ஸ் புத்தகங்கள் இருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments