Advertisement

3 மாநிலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை கைது செய்த சென்னை போலீஸார்

சென்னை: 3 மாநிலங்​களில் ஏராள​மான குற்​றச்​செயல்​களில் ஈடு​பட்​டு​வந்த முக்​கிய ரவுடியை சென்னை போலீ​ஸார் துப்​பாக்கி முனை​யில் கைது செய்​தனர். சென்னை சூளைமேட்​டைச் சேர்ந்த பிரபல ரவுடி மாடு தினேஷ் (39). இவர் மீது தமிழகத்​தில் மட்​டும் கொலை, செம்மர கடத்​தல், கஞ்சா விற்​பனை, வழிப்​பறி, திருட்டு உட்பட 30-க்​கும் மேற்​பட்ட குற்ற வழக்​கு​கள் உள்​ளன.

2010 முதல் 15 ஆண்​டு​களாக இவர் தலைமறை​வாக இருந்து வந்​தார். தான் இறந்​து​விட்​ட​தாக கூட்​டாளி​கள் மூலம் போலீ​ஸாருக்கு தவறான தகவல்​களை கொடுத்​து, திரை மறை​விலிருந்து குற்​றச்​செயல்​களில் ஈடு​பட்டு வந்​துள்​ளார். சென்னை போலீ​ஸாரின் நெருக்​கடி​யால் இருப்​பிடத்தை ஆந்​தி​ரா​வுக்கு மாற்​றி​யுள்​ளார். அங்​கும் குற்​றச்​செயல்​களில் ஈடு​பட்டு கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். இதே​போல் கர்​நாடகா மாநிலத்​தி​லும் இவர் மீது வழக்கு உள்​ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments