
திருநெல்வேலி மாவட்டம் பழவூரில் 8 மாதங்களுக்குமுன் காணாமல்போன பெண் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அவரது எலும்புக் கூடு மற்றும் உடைகள் சேரன்மகாதேவி அருகே கால்வாயிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழவூர் அருகே மாடன்பிள்ளைதர்மம் கிராமத்தை சேர்ந்த சிவலிங்கதுரை மகள் கயல்விழி (28). இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி கோயிலுக்கு சென்று வருவதாக சென்றவர் அதன் பின்னர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இது தொடர்பாக, பழவூர் காவல் நிலையத்தில் சிவலிங்கதுரை புகார் செய்தார். அதன்பேரில் இளம்பெண் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை போலீஸார் தேடிவந்த நிலையில், காணாமல்போன பெண்ணின் நட்பு வட்டாரங்கள் மற்றும் அவரது தொலைபேசி தகவல் தொடர்பான மின்னணு சாட்சிய விவரங்களை போலீஸார் சேகரித்து ஆய்வு செய்துவந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments