Advertisement

தவெகவினர் கோஷ்டி மோதலில் 6 பேர் காயம்; 5 பேர் கைது - கிருஷ்ணகிரியில் நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தவெக தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில், 6 பேர் காயம் அடைந்தனர். 5 பேரை போலீஸார் கைது செய்தனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் சசிக்குமார் (35) தலைமையில் புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சலீம் (31) மற்றும் நிர்வாகிகள் நேற்று முன்தினம் 2 கார்களில் கீழ்புதூர் பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்யச் சென்றனர்.

அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த தவெக கிளைச் செயலாளர் விஜய் (எ) நாகராஜ் என்பவர், ”எனக்கு தகவல் அளிக்காமல் எப்படி மரக்கன்றுகளை நடவு செய்யலாம்” எனக் கேட்டார். இதையடுத்து, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த புதிய பாஞ்சாலியூரைச் சேர்ந்த தபு என்கிற தப்ரீஷ் (26) உள்ளிட்ட தவெகவைச் சேர்ந்த 10 பேர், நாகராஜ் மற்றும் அவருடன் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments