
சென்னை: காதல் மனைவியுடன் வாழாமல் ஒன்றரை ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்த இளைஞர் கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக மனைவியின் சகோதரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மேற்கு மாம்பலம், எல்ஐஜி பிளாட்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் கலையரசன் (23).
கூரியர் நிறுவனம் ஒன்றில் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 15-ம் தேதி அதிகாலை அசோக் நகர்,35-வது தெருவில் நின்றிருந்தார்.அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கலையரசனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். படுகாயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கலையரசன் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments