
சென்னை: திருமண மண்டபத்தில் மணப்பெண்ணின் நகைகளை திருட முயன்ற, உ.பி.யைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் கடந்த 7-ம் தேதி திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அங்குள்ள மணமகள் அறையில் மணப் பெண்ணின் நகைகளில் ஒரு பகுதி வைக்கப்பட்டு பூட்டப்பட்டது. இதை நோட்டமிட்ட 3 நபர்களில் ஒருவர், மற்றொரு சாவி போட்டு மணமகள் அறையை திறந்து அங்கு வைக்கப்பட்டிருந்த நகையை திருட முயன்றார்.
இதை, மணப்பெண்ணின் பியூட்டிஷன் வினோதினி (43) என்பவர் கண்டு அதிர்ச்சி அடைந்து, திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தப்பி ஓட முயன்ற கொள்ளையர்கள் 3 பேரையும் பிடித்து சரமாரியாக தாக்கி, அவர்களை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments