Advertisement

சிவகங்கை அருகே ஆடு, கோழி திருடியதாக சகோதரர்கள் 2 பேரை அடித்துக் கொன்ற கிராம மக்கள்: 6 பேர் கைது

சிவகங்கை: ஆடு, கோழி திருடியதாக சகோதரர்கள் 2 பேரை கிராம மக்கள் சிலர் அடித்துக் கொன்றனர். இது தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி அருகேயுள்ள அழகமாநகரி பகுதி தோட்டத்தில் நேற்று அதிகாலை 2 பேர் ஆடு, கோழிகளைத் திருடிக் கொண்டிருந்தனர். அப்போது காணாமல்போன மாட்டைத் தேடி வந்த இருவரைப்பார்த்தவுடன், ஆடு, கோழி திருடிக் கொண்டிருந்த இருவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். தகவலறிந்து திரண்ட கிராம மக்கள் சிலர் இருவரையும் விரட்டிப் பிடித்து, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments