
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் அதிக அளவு போதைப்பொருள் சென்னைக்கு கடத்தி வரப்படவுள்ளதாக, சென்னை விமான நிலைய சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகள் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments