
சென்னை: வெளிநாட்டில் வசிக்கும் தனது உறவினரின் வீடுகளை போலி பத்திரங்கள் மூலம் லீஸுக்கு (குத்தகைக்கு) விட்டு, ரூ.32 லட்சம் பணத்தை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை பெரம்பூர், கோபால் காலனி, மேற்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட் வில்லியம் (62). வெளிநாட்டு இந்தியரான இவருக்குச் சொந்தமான இடம் மடிப்பாக்கத்தில் உள்ளது. இந்த இடத்தில் குடியிருப்பு கட்டுவதற்கான பொறுப்பை சகோதரி மகனான வியாசர்பாடி, பெரியார் நகரைச் சேர்ந்த ஜேசு ஆனந்த் (38) என்பவரிடம் ஒப்படைத்துள்ளார். கட்டுமானத்துக்கு தேவைப்படும் பணம் அனைத்தையும் கொடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments