
சென்னை: சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு விரைவு ரயிலில் 65 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை கடத்த முயன்ற ராஜஸ்தான் இளைஞரை ஆர்பிஎஃப் போலீஸார் மடக்கி பிடித்தனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எஃப் காவல் ஆய்வாளர் கே.பி.ஜெபஸ்டியன் தலைமையில் ஆர்.பி.எஃப் உதவி துணை ஆய்வாளர்கள் முகமது அஸ்லாம், அன்புசெழியன், தலைமை காவலர்கள் ராஜேஷ், ஜி. கண்ணன், வி.குமரவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட தயாராக இருந்த விரைவு ரயிலில் பெரிய பார்சல்களுடன் ஒருநபர் ஏறினார். அவர் மீது ஆர்.பி.எஃப் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து, அவரது பைகளை சோதித்தபோது, அதில் தடைசெய்யப்பட்ட 65 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் இருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments