Advertisement

சென்னை விமான நிலையத்தில் 3 மாதங்களில் கேட்பாரற்றுக் கிடந்த உடமைகளில் ரூ.1.3 கோடி மதிப்புள்ள தங்கம், ட்ரோன்கள்!

சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 மாதங்களில் கேட்பாரற்றுக் கிடந்த உடமைகளில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.1.3 கோடி மதிப்புள்ள தங்கம், சக்தி வாய்ந்த ட்ரோன்கள், விலை உயர்ந்த கைக்கடிகாரம், நட்சத்திர ஆமைகள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தின் வருகை பகுதியில் கடந்த 3 மாதங்களில் கேட்பாரற்று கிடந்த உடமைகளை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் ஒரு உடமைக்குள் சுமார் ரூ.80 லட்சம் மதிப்புள்ள 1.157 கிலோ தங்கக் கட்டிகள், மற்றொரு உடமைக்குள் ரூ.13 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று, மற்றொரு உடமைக்குள் 427 நட்சத்திர ஆமைகள் இருந்தன. அந்த நட்சத்திர ஆமைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும். அதேபோல், கேட்பாரற்று கிடந்த மற்றொரு உடமைக்குள் ரூ.26 லட்சம் மதிப்புள்ள சக்தி வாய்ந்த 16 ட்ரோன்கள் இருந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments