
கோவை: கோவையில் கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.2.13 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
கோவை - பாலக்காடு சாலை க.க.சாவடியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனைச் சாவடியில் இருந்து கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஆவணங்களில் ‘சீல்’ வைத்து வழங்கப்படும். இந்த பணிக்காக, வாகன ஓட்டிகளிடம் கையூட்டு பெறுவதாக புகார்கள் எழுந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments