
சென்னை: சென்னை அசோக் நகர், சீனிவாச பிள்ளை தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் தொழில் அதிபர் வெங்கட்ரமணன் (58). இவர், பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் அவரது மகள்களை பார்க்க கடந்த 4-ம் தேதி அவரது மனைவியுடன் சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 1.30 மணியளவில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் இருவர் உள்ளே புகுந்தனர்.
இதை வெங்கட்ரமணன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் அவரது செல்போனுக்கு அலர்ட் செய்தி வந்தது. இதை அறிந்து கொண்ட வெங்கட்ரமணன் அங்கிருந்தபடியே சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, தகவல் கிடைத்த அசோக் நகர் போலீஸார் அந்த வீட்டுக்கு விரைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments