
திருச்சி: இலங்கையில் இருந்து திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புடைய ஹைட்ரோ போனிக்ஸ் எனப்படும் உயர் ரக கஞ்சாவை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பாங்காக்கில் இருந்து இலங்கை வழியாக தமிழகத்துக்கு போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், இலங்கையில் இருந்து திருச்சிக்கு நேற்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments