
சென்னை: சென்னையில் போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், மதுரவாயல் போலீஸார் வானகரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகே கண்காணித்தனர்.
அப்போது, அங்கு மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை வைத்திருந்த புழல் கிஷோர்குமார் (23), அதே பகுதி மணிகண்டன் என்ற மணி (36) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி வானகரத்தைச் சேர்ந்த பாசில் உல்லா (36) என்பவர் கைது செய்யப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments