
மதுரை: மதுரை உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கில் போலீஸ் சுட்டுப் பிடித்த நபருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
உசிலம்பட்டி அருகிலுள்ள கள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் காவலர் முத்துக்குமார். இவரை உசிலம்பட்டி அருகே 27-ம் தேதி கல்லால் தாக்கி 4 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தது. கொலையைத் தடுக்க முயன்ற அவரது நண்பர் ராஜாராம் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக உசிலம்பட்டி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments