
ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளிக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்த 17 வயது மாணவரை அரிவாளால் வெட்டிய மூன்று சிறுவர்களை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், தினமும் ஊரில் இருந்து பேருந்து மூலம் பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு தனியார் பேருந்தில் மாணவர் சென்றுகொண்டிருந்தார். அந்த பேருந்து கெட்டியம்மாள்புரம் பகுதியில் சென்றபோது, சுமார் 17 வயது மதிக்கத்தக்க மூன்று சிறுவர்கள் பேருந்தை வழிமறித்து நிறுத்தி ஏறியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments