
ஓசூர்: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 715 கிலோ செம்மரக் கட்டைகளை ஓசூர் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் அருகேயுள்ள கூசனப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜு (43). இவரது வீட்டின் பின்புறம் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஓசூர் ஏஎஸ்பி அக்ஷய் அனில் வாக்கரேவுக்கு தகவல் வந்தது. ஏஎஸ்பி உத்தரவின் பேரில், பாகலூர் போலீஸார் நேற்று முன்தினம் இரவு ராஜு வின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments