
விருதுநகர்: அருப்புக்கோட்டை அஞ்சல் நிலையத்தில் ரூ.5 கோடி மோசடி செய்ததாக அஞ்சல் உதவியாளரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள சூலக்கரை மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் அமர்நாத் (38). சிவகாசி தலைமை அஞ்சலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்த இவர், ஓராண்டுக்கு முன்பு அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்துக்கு அயல்பணியாகச் சென்றார். அப்போது, கணினி தொழில்நுட்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, அஞ்சலக வாடிக்கையாளர்கள் செலுத்திவந்த ரூ.5 கோடியை தனது சேமிப்புக் கணக்கில் வரவு வைத்து, முறைகேடு செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments