
குன்றத்தூர்: சென்னை அருகே குன்றத்தூரை அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிரிதரன் (34). இவர் மனைவி பவித்ரா (30), மகள் வைஷாலினி(6), மகன் சாய் சுந்தரேசன்(1) ஆகியோருடன் வசித்து வந்தார். கிரிதரன் குன்றத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக கடந்த 4 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். குழந்தை வைஷாலினி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படித்து வந்தார்.
அண்மைக் காலமாக இவர்களது வீட்டில் எலி தொந்தரவு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. எலிகளை கட்டுப்படுத்துவதற்காக சென்னை, தியாகராய நகரில் செயல்பட்டு வரும் பெஸ்ட் கன்ட்ரோல் நிறுவனத்தை கிரிதரன் தொடர்பு கொண்டுள்ளார். இதனால் நேற்று முன்தினம் 2 பேர் வந்து அவரது வீட்டில் ஆங்காங்கே எலி மருந்தை தெளித்தனர். மேலும் வீடு முழுவதும் எலிகள் வராமல் இருப்பதற்காக மருந்து அடித்ததாக கூறப்படுகிறது. பிறகு, இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மருந்திலிருந்து பரவிய நெடி தாங்காமல் நள்ளிரவு நேரத்தில் குழந்தை வைஷாலினிக்கு திடீர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments