
கேளம்பாக்கம்: ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு வேறு நபரின் பெயரில் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியது தொடர்பாக கடலூர் பள்ளி தாளாளர் அருண்ராஜை போலீஸார் தேடி வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments